உக்ரைன் மீது ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதனால் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஸெலென்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு தலைவலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புட்டின் உலகை சோதிக்கிறார்.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புட்டின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை என்று ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதைாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Zelensky calls sanctions Russia
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


