கதிர்காமம் பௌத்த ஆலயத்துக்கு பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் குருணாகல் கெபெல்லேவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் அரச மரத்தில் ஏறி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அநாகரீகமாக நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குறித்த இளைஞனை மரத்திலிருந்து கவனமாகக் கீழே இறக்கியதாக தெரிவித்தனர்.
இருப்பினும், இளைஞன் மரத்திலிருந்து கீழே இறங்கியவுடன், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மேலதிக விசாரணைக்காகக் காவல்நிலையத்தில் இளைஞன் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


