வடமராட்சி நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தூக்கிட்டு உயிர்மாய்க்க முயன்ற குடும்பப் பெண் ஒருவர் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்…
தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக குறித்த குடும்பப் பெண் நேற்று (5)திடீரென தூக்கிட முயற்சித்துள்ளார்.
தற்கொலைக்கு முயற்சித்த குறித்த குடும்ப பெண்ணை அவதானித்த அயலவர்களால் அப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


