பிரபல தொலைக்காட்சி விஜய் யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி.
ஆனால் இம்முறை சீசன் 9 அதிகளவான மக்கள் வெறுக்கின்றனர். காரணம் நிகழ்ச்சில் உள்வாங்கப்பட்டிருக்கும் போட்டியாளர்கள்.
காதலிக்க உள்ள வந்திருக்கும் ஜோடிகள், தனக்கு கீழே மற்றவர்களை வைத்திருக்க நினைப்பவள், அழகு பொம்மைகளாக வலம் வருபவர்களுக்கு மத்தியில் விக்ரம், வோட்டர்மெலான் திவாகர், பிரவீன், ரம்யா,
சபரி, கனி,சுபிக்ஷ,பிஜே மாத்திரமே விளையாட வந்தவர்கள் போல உள்ளது.
இவர்கள் சண்டை இட்டாலும் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் விளையாடி தங்களை வெளிப்படுத்துகின்றனர்
ஆனால் பார்வதி, கமூர்த்தின் இருவரும் மிக கேவலமான வார்த்தைகளை பேசி வருகின்றார்கள். பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறனர். இந்த வாரம் மாத்திரம் வெஸ்ட் கண்டஸ்டென் இல்லை இந்த நிகழ்ச்சிக்கே இருவரும் வேஸ்ட்.
பிக் பாஸ் இவ்வாறான போட்டியாளர்களை மக்கள் பார்க்க கண்டிக்க வேண்டும். மக்கள் செல்வன் வார இறுதியில் கேள்வி கேட்பார் என்று பார்த்தால் போட்டியாளர்கள் வாய் திறக்க ஆரம்பிக்கும் போதே ‘சரி நீங்க இருங்கனு’ சொல்லிடுவார். பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பது என்ன? போட்டியாளர்களின் தவறை சுட்டிக் காட்டும் விதமாக குறும் படம் போட்டு காட்டவேண்டும்.
இதற்கு முன் சீசன் 8 வரை பார்ப்பவர்களை ரசிக்கவும், பங்கு பற்றியவர்களை நல்ல நிலையில் உயர்த்தி உள்ளது இந்நிகழ்ச்சி, பார்ப்போம் இனி வரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களின் திறமையை எப்படி என்று…


