Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடமராட்சி கிழக்கு போக்குவரத்துக்கு தீர்வினை கொண்டு வருவோம்-ரஜீபன்

வடமராட்சி கிழக்கு போக்குவரத்துக்கு தீர்வினை கொண்டு வருவோம்-ரஜீபன்

நமது நிருபர்

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்துக்கு பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் ரஜீபன் அவர்கள் தெரிவிப்பு….!

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீபன் ஊடகங்களுக்கு கருத்து வழங்கையில் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் கூறுகையில்

யாழ்ப்பாணத்தில் மிகவும் கஷ்டமான மற்றப் பல பிரச்சனைகளையும் அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமாக வடமராட்சி கிழக்கு காணப்படுகின்றது இவ் பிரதேசத்தில் பல அபிவிருத்தி களை செய்யவேண்டிய கடமையில் நாம் உள்ளோம்

முக்கியமாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது பணியினை ஒழுங்காக செய்வது இல்லை மற்றும் பரீட்சை காலங்களில் பேரூந்துகள் இடையில் பழுதடைந்து நிற்பது இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது

இதற்கான தீர்வினை வெகுவிரைவில் நாம் எடுப்போம் அதற்கான நடவெடிக்கைகளை நடைபெற்று வருகிறது மற்றும் இவ் பிரதேசத்தில் அதிகளவான தொழில் முனைவோர்களை கொண்டு வந்து இவ் பிரதேசத்தின் அபிவிருத்தியை ஊக்குவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments