Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் இருவர் மாயம்

மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் இருவர் மாயம்

கடந்த செவ்வாய் கிழமை
(6) அன்று தொடர்ச்சியாக வானிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குந்துகால் FLC பகுதியில் இருந்து, திரு. நம்புசாமி (த/பெ. கருப்பையா) என்பவருக்குச் சொந்தமான, பதிவு செய்யப்படாத இயந்திரம் பொருத்தப்பட்ட மீன்பிடி படகில், பின்வரும் 5 மீனவர்கள் பலநாள் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்றனர்.

ரீகன், த/பெ. கிங்ஸ்டன், தெற்கு வாடி
சரத்குமார், த/பெ. கருப்பையா, சின்னபாளம்
டைசன், பெரியதலை
டோனி, த/பெ. செரோன், பாம்பன்
வெள்ளைச்சாமி, தெற்கு வாடி
இந்நிலையில், நேற்று 09.01.2026 அன்று தனுஷ்கோடி அருகே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, படகிலிருந்த இருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளனர்.

சரத்குமார், த/பெ. கருப்பையா, சின்னபாளம்
டைசன், பெரியதலை
மீதமுள்ள குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான தேவையான தகவல்கள் மேலதிக நடவடிக்கைக்காக கடலோர காவல் படை மற்றும் கடற்படை காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments