(நமது நிருபர்)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாய்மார்களினால் சுடர் ஏற்றிவைக்க, அதனை தொடர்ந்து மாவீரர்களது திருவுருவ படங்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் குடத்தனை வடக்கு, குடத்தனை கிழக்கு, பொற்பதி அம்பன் உட்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் வருகைதந்து மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


