நமது நிருபர்
இந்த நாட்டில் மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட பருத்தித்துறை நகர சபை மக்களுக்கு இல்லை என்று பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி கவலை தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் தொடர்பாக பருத்தித்துறை தவிசாளர் தலமையில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
மழை காலத்தில் மிருகங்கள் கூட மழை நீர் தேங்காத இடத்திற்கு தான் செல்லும் ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் பருத்தித்துறை நகரப்பகுதி சந்தையில் வியாபாரம் செய்யும் மக்களுக்கு இந்த சுதந்திரம் கூட இல்லை என்றார்.


