Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..!

தலவாக்கலையில் 80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பஸ் சாரதி..!

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இ.போ.ச டிப்போ பஸ்ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ,சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு மண் மேட்டில் மோதியதாகவும், பின்னர் பஸ்ஸை நிறுத்தியதாகவும் கினிகத்தேன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேன கடவல பகுதியில் உள்ள மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

குறித்த பஸ் வளைவில் செல்ல முயன்றபோது, ​​பஸ்ஸை கட்டுப்படுத்த இரண்டாவது கியரை மாற்றியதாகவும், அந்த நேரத்தில் பஸ்ஸின் பிரேக்கிங் சிஸ்டம் செயலிழந்ததால், பிரேக்குகளைப் பயன்படுத்தி ஒரு சாய்வான பகுதியில் உள்ள ஒரு மலையில் சென்று பஸ்ஸை நிறுத்தியதாகவும் 49 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான மகேஷ் சுதர்சன் தெரிவித்தார்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் சுமார் 80 பயணிகள் இருந்தனர், மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறொரு பஸ்ஸில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

விபத்து குறித்து கினிக்கத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிப்பின் பேரில் முழுமையான கினிக்கத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments