நமது நிருபர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள் வாடிகள் சேதமடைந்துள்ளன.
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள் செதமடைந்துள்ளதுடன் மீன்பிடி வாடிக்களம் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல மீனவர்களுடைய மீன்பிடி வேலைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது சிலருடைய மேம்படி உபகரணங்கள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கடலோடு அடித்துச் செல்லப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மீனவர்கள் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே வறுமையில் இருக்கும் இவர்களுக்கு இது ஒரு பாரிய நஷ்டம்





