வடமராட்சி நிருபர்
வங்காள விரிகுடாவில் உருவான தாளமுக்கத்தின் காரணமாக தற்போது வடமராட்சி கடற்பரப்புகளில் அதிக காற்று வீசி வருகிறது.
அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்
பலமான காற்று வீசி வருவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



