இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியாகியுள்ளது.
இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதியினால் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


