Thursday, March 12, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் இலங்கை தமிழன் கைது

கனடாவில் இலங்கை தமிழன் கைது

கனடாவில் வீடுகளுக்குள் நுழைந்ததாக சந்தேக நபரான தமிழ் இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மார்க்கம் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சேர்ந்த 36 வயதான நிஷாந்த் செல்வரட்னம் என்பவர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி வீடொன்றுக்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

பூட்டப்படாத கதவு வழியாக சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்தார் எனவும் வீட்டு உரிமையாளரை எதிர்கொண்டபோது பயந்து ஓடிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள குறைந்தது மேலும் இரண்டு வீடுகளுக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் குறிபிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழரான சந்தேக நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில், நிஷாந்த் செல்வரட்னம் வேறு குற்றங்களுக்காக நன்னடத்தை பிணையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments