Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

ஜெருசலேமில் பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்ததாவது, நகரின் வடக்கு புறநகரான ராமோட் சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தை நோக்கி இரண்டு தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.

அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரியும், ஒரு பொதுமகனும் பதில் தாக்குதல் நடத்தி, தாக்குதல்தாரிகளை நடுநிலைப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹமாஸ் இந்த தாக்குதலை பாராட்டியுள்ளதாலும், இதுவரை எந்த ஆயுதக் குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை.

சம்பவத்துக்குப் பின் ஏராளமான பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். அதே சமயம் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments