கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது சற்றுமுன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர், உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்


