2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேன்முறையீடுகள் நாளை (9) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
22ஆம் திகதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
மாணவர் கல்வி பெறும் பாடசாலையின் அதிபர், வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி SCHOOL LOGIN வழியே விண்ணப்பிக்க வேண்டும்.


