யாழ்ப்பாணம் வடமராட்சி தோண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா செட்டிகுளம் ஞானப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை, சிதம்பரபுரம் திருப்பழனி அறநெறிப் பாடசாலை, முதலியார்குளம் வேல்முருகன் அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 146 மாணவர்களுக்கு ரூபா 225,000 பெறுமதியான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் வவுனியா மாவட்டத்தின் 10 அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற 30 ஆசிரியர்களுக்கு ரூபா
150,000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களூடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்,






