Sunday, June 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்RIMPAC பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இலங்கை கடற்படை குழு

RIMPAC பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இலங்கை கடற்படை குழு

அமெரிக்க பசிபிக் கடற்படையால் (U.S. Pacific Fleet) ஏற்பாடு செய்யப்பட்ட Rim of the Pacific 2026 (RIMPAC 2026) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க இலங்கை கடற்படைக்குழு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது.

பதின்மூன்று (13) அதிகாரிகள் மற்றும் முப்பது (30) மாலுமிகளைக் கொண்ட இலங்கை கடற்படை கடற்படை மரைன் படைபிரிவின் மீது இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட,  (18 ஆம் திகதி) அன்று கடற்படைத் தலைமையகத்தில், இலங்கைக் கொடி பொறிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கினார்.

உலகின் மிகப்பெரிய பலதரப்பு கடல்சார் பயிற்சியான RIMPAC 2026, 30வது முறையாக நடைபெற உள்ள இதில், முப்பத்தி ஒன்று (31) நாடுகளைச் சேர்ந்த ஏராளமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், தரைப்படைகள் மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள்.

இந்தப் பயிற்சி, ஜூன் 24 முதல் ஜூலை 31 வரை, ஹவாய் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதுடன், பங்கேற்ற கடற்படை மரைன் கார்ப்ஸ் அணி (ஜூன் 19,) தீவிலிருந்து புறப்பட்டது.

மேலும், இதுபோன்ற பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பது, நாட்டின் கடற்படை மண்டலத்திலும் அதற்கு அப்பால் சர்வதேச கடற்படை மண்டலத்திலும் உள்ள மரபுசாரா கடற்படை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் உட்பட அனைத்து கடற்படை நடவடிக்கைகளுக்கும் தேவையான புதிய அறிவு, உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், கூட்டு கடற்படை போன்ற பலதரப்பு கடற்படைப் படைகளுடன் ஒருங்கிணைந்து கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், புதிய கடற்படை சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்கு கூட்டாகத் தீர்வு காண்பதற்கும் இலங்கை கடற்படைக்கு வாய்ப்பளிக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments