Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மாணவனை தாக்கிய அதிபருக்கு பிணை

மாணவனை தாக்கிய அதிபருக்கு பிணை

பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கைது செய்யப்பட்ட அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

சந்தேகநபரைத் தலா மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments