Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மன்னாரில் "கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்"

மன்னாரில் “கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்”

மன்னார் நிருபர்

மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில், மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம், பனை வள முகாமைத்துவம் தொடர்பான விசேட “கொள்கை மன்றம்” நேற்று(6) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

GEF/SGP/UNDP நிதியுதவியுடன் மன்னார்–கிளிநொச்சி வரையிலான சதுப்பு நிலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சூழலியல் செயற்திட்டங்கள் குறித்து இம் மன்றத்தில் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

MARR, WECAN, USDH, Sobakantha, HDO ஆகிய அமைப்புகள் செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக UNDP ஆய்வு பொறுப்பாளர் புத்திக்க ஹபு ஆராய்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பாளர் தனுஜா தர்மசேன மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் முக்கியமாக பங்கேற்று, கண்டல் பாதுகாப்பு, பனை வள மேம்பாடு, கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் புதிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments