நேபாளத்தில் இன்று இரவு முதல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பொறுப்பை நேபாள இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய நகரங்களில் இராணுவம் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது.
நிலைமைக்கு அமைதியான தீர்வை காண போராட்டக் குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


