Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்படிக்குமாறு கூறிய தாய்; விபரீத முடிவெடுத்த மகள்

படிக்குமாறு கூறிய தாய்; விபரீத முடிவெடுத்த மகள்

யாழில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் கவிசனா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி இவ்வாறு முடிவெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தாயார் அந்த மாணவியை தினமும் படிக்குமாரு தெரிவிப்பதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 12 ஆம் திகதியும் இவ்வாறு தாயார் தெரிவித்ததால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தீக்காயங்களுக்குள்ளான மாணவி மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments