நமது நிருபர்
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் doctor சுசில் ரணசிங்க இன்று வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை பார்வையிட இன்று காலை 9:00 மணியளவில் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் செயல்முறைகள் மற்றும் பொறியியல் தொகுதி என்பவற்றை பார்வையிட்ட அமைச்சர் அங்கு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். அவர் தொடர்ந்து வடமராட்சி பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது


