எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக நம்பர் டிக்கெட் வாங்கிய நபர் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. எல்பிட்டிய பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


