Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அத்தியாவசிய சேவைகளுக்கு பிரத்தியோக எண் அறிமுகம்

அத்தியாவசிய சேவைகளுக்கு பிரத்தியோக எண் அறிமுகம்

நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் ஏற்படும் முறைப்பாடுகள் மற்றும் சிரமங்களை விரைவாக முறைப்பாடு செய்ய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் (CGES) ‘1904’ என்ற பிரத்தியோக எண்ணை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளிக்க ‘1904’ என்ற எண்ணைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்:

மின்சாரம்,
எரிபொருள் விநியோகம்,
மருத்துவமனை மற்றும் அவசர மருத்துவ சேவைகள்,
பொது போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்,
நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு,
2464/29 என்ற அதிவிசேட வர்த்தமானியின் கீழ் அறிவிக்கப்பட்ட நீர்ப்பாசனம் மற்றும் பிற அத்தியாவசிய பொது சேவைகள்
அவசரகால சூழ்நிலைகள் அல்லது சேவை இடையூறுகளின் போது குடிமக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகளுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான தீர்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

‘1904’ என்ற எண்ணுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலக செயல்பாட்டு மையத்தில் பெறப்படும்.

அங்கு முறைப்பாடுகள் சரிபார்க்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைக்காக தொடர்புடைய துறைசார் பதில் குழுக்களுக்கு அனுப்பப்படும்.

அதன்படி, அவசர தொலைபேசி எண்ணை பொறுப்புடன் பயன்படுத்தவும், விரைவான தீர்வை எளிதாக்க துல்லியமான தகவல்களை வழங்கவும் அனைத்து குடிமக்களும் ஒத்துழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments