Sunday, March 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்4.3 ஓவர்களில் இலக்கை அடைந்த இந்தியா!

4.3 ஓவர்களில் இலக்கை அடைந்த இந்தியா!

ஆசியக் கோப்பை 2025 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்களில் 57 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 2.1 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவம் துபே 2 ஓவரில் 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை பெற்றார். யுஏஇ அணியில் ஷரஃபு (22), கேப்டன் முகமது வாசீம் (19) ஆகியோர் மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டினர்.

வெற்றி இலக்காக இருந்த 58 ரன்களை இந்தியா எளிதாக அடைந்தது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 16 பந்தில் 30 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்ஸ்) சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் சுப்மன் கில் (20 ரன், 9 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸ்), சூர்யகுமார் யாதவ் (7 ரன், 2 பந்துகள், 1 சிக்ஸ்) இணைந்து இந்தியாவை 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிநடத்தினர்.

இந்த வெற்றியால் இந்தியா, ஆசியக் கோப்பை தொடரில் தன் பலத்தை தெளிவாக காட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments