யாழில் சட்டவிரோதமாக இயங்கி வந்த இரண்டு விடுதிகள் நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன
இதன்போது ஆறு பெண்களும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


