Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூன்று ஊழியர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்கள், சுமார் ரூ. 330 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரி திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால், வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சோதனையின் போது மொத்தம் 2,030,000 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments