மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் சமர்ப்பித்த சட்டமூலம் கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை ஹேமா பிரேமதாச மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.


