வடமராட்சி நிருபர்
மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரகவாகனம் செல்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதான அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்துக்கமைய இன்றைய தினம் மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரகவாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கனரகவாகன சாரதிகளும் இவற்றை கருத்தில் எடுக்குமாறும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தவிசாளர் யுகதீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


