இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று(02) நிகழ்ந்துள்ளது.
தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின்போதே, இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


