இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் மூலம் 5.116 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட19.3 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 1.88 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாயுடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
காணாமல் போன 6,700 பேர் குறித்த முதற்கட்ட விசாரணை நிறைவு!
16 மாணவர்கள் கைது – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை!
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


