எல்ல–வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர் தங்காலை மாநகர சபையில் பணியாற்றிய 41 வயதான நமாலி கமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


