Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தந்தை திட்டியதால் விஷம் அருந்திய மகள்!

தந்தை திட்டியதால் விஷம் அருந்திய மகள்!

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல 14 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தனது தந்தை திட்டியதால் , தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த சிறுமி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன் திங்கட்கிழமை (08) அன்று ஆடைகளை தைப்பதற்கு நகரத்திற்கு சென்று, வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அவளுடைய தந்தை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி விஷம் அருந்தியுள்ளதுடன் பின்னர், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09) நேற்று உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புதன்கிழமை (10) இன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments