Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு மத்திய பேருந்து முனைய த்தினை நாளை முதல் மூட நடவடிக்கை!

கொழும்பு மத்திய பேருந்து முனைய த்தினை நாளை முதல் மூட நடவடிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முனையத்தின் புனரமைப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முடியும் வரை புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பஸ்தியன் மாவத்தை ஆகிய இடங்களில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.

ஊடகங்களுக்குப் பேசிய அவர், இந்தக் காலகட்டத்தில் புனரமைப்புப் பணிகளை இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

ஒருங்கிணைந்த கால அட்டவணையின் கீழ் உள்ளவை உட்பட நீண்ட தூர பேருந்துகள் பாஸ்டியன் மாவத்தை பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் என்றும், ஏனைய குறுகிய தூர பேருந்துகள் போதிராஜா மாவத்தையில் இருந்து இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் க்ளின் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

செப்டம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்தப் புனரமைப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும்.

ஒரு வருடத்திற்குள் முடிக்க எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்திற்காக 540 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments