பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக, பலர் காணாமல்போயுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.


