அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், மிரட்டல் வெடிகுண்டு அல்ல, புரளி (பிராங்க்) வகையிலானது என்று உறுதி செய்யப்பட்டது.
இதற்குப் பின்னர், கவர்னர் மாளிகை மற்றும் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


