பிப்ரவரி 14 வந்தாலே போதும், சமூக வலைதளங்கள் முழுக்க சிவப்புக் ரோஜாக்களும், விலையுயர்ந்த பரிசுகளும், “When you know, you know” போன்ற கேப்ஷன்களும் ஆக்கிரமித்து விடுகின்றன.
காதலர் தினம் என்பது தற்போது உண்மையான அன்பைக் கொண்டாடுவதை விட, பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்யப்படும் ஒரு ‘பெர்ஃபார்மன்ஸ்’ ஆக மாறிவிட்டது.
இந்த ஜோடிகளின் ஆரவாரங்களுக்கு நடுவே, தாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக சிங்கிள்ஸ் (Singles) நினைக்கத் தேவையில்லை.
மாறாக, இன்று சிங்கிளாக இருப்பது என்பது ஒரு புதிய வகை அதிகாரமளித்தல் (Empowerment) என்கிறது தற்போதைய இளைய தலைமுறை (Gen Z).
சமூக வலைதள அங்கீகாரம் தேவையில்லை
காதலர் தினக் கலாச்சாரம் என்பது இன்று மிக உரத்த குரலில் பேசப்படுகிறது.
விலையுயர்ந்த பரிசுகள், நேர்த்தியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனத் தங்கள் காதலை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜோடிகள் உள்ளனர்.
ஆனால் சிங்கிளாக இருப்பவர்கள் இந்த தேவையற்ற ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
மற்றவர்களின் அங்கீகாரம் (External Validation) இன்றி, தங்களின் இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்வது ஒரு மிகச்சிறந்த மனநிலை (Elite mindset) ஆகும்.
பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் மன அமைதி
நிச்சயமாகச் சொல்லப்போனால், காதலர் தினம் என்பது சிவப்பு உடை அணிந்த முதலாளித்துவம் (Capitalism in a red outfit).
உணவகங்களில் இரட்டிப்பு விலை, பூக்களின் தட்டுப்பாடு என பணத்தை உறிஞ்சும் ஒரு வணிக உத்தியாக இது மாறிவிட்டது. சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த நிதி நெருக்கடி இல்லை.
தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களுக்காகவோ அல்லது ஒரு சிறிய சுற்றுலாவுக்கோ (Solo staycation) செலவிடும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.
பொருளாதார அமைதி (Financial peace) என்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய வரம்.
தரமற்ற உறவை விட தனிமையே மேல்!
காதலர் தினத்தின் மிகப்பெரிய மோசடியே, “யாரோ ஒருவருடன் உறவில் இருப்பது, தனியாக இருப்பதை விட சிறந்தது” என்ற மாயையை உருவாக்குவதுதான்.
ஆனால், அரைகுறையான அன்பு (Bare minimum energy) மற்றும் குழப்பமான உறவுகளில் இருப்பதை விட, தனிமையில் இருப்பதே சுயமரியாதை (Self-respect) சார்ந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தங்களுக்குத் தகுதியான அன்பிற்காகக் காத்திருப்பது பலவீனம் அல்ல, அது உயர்ந்த தரம் (High standards).
‘மெயின் கேரக்டர்’ அந்தஸ்து
காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் வாழ்வின் நாயகர்களாக மாறுகிறார்கள். மற்றவர்களின் மனநிலைக்கோ அல்லது நேரத்திற்கோ ஏற்பத் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
ஒரு நல்ல படம் பார்ப்பது, பிடித்த உணவை உண்பது எனத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே மெருகேற்றிக் கொள்கிறார்கள்.
மகிழ்ச்சிக்காக இன்னொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை.
அன்பு என்பது காதல் மட்டும் அல்ல
காதலர் தின விளம்பரங்கள் ‘காதல்’ மட்டுமே வாழ்க்கையின் உச்சம் என்பது போலச் சித்தரிக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கை அதையும் தாண்டியது.
சிங்கிளாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆழமான நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் தங்களைப் பற்றிய சுய புரிதலைக் கொண்டுள்ளனர்.
காதலை விட சுய-அன்பு (Self-love) மற்றும் சமூக உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
எமோஷனல் இண்டிபெண்டன்ஸ்
மற்றொருவர் அனுப்பும் ஒரு குறுஞ்செய்திக்காகவோ அல்லது அழைப்பிற்காகவோ காத்துக் கொண்டிருக்காமல், தன் மனநிலையைத் தானே தீர்மானிப்பது ஒரு மிகப்பெரிய ஆளுமைத் திறன்.
இந்த உணர்ச்சி ரீதியான சுதந்திரம் ஒருவருக்கு அதிக ஆற்றலைத் தருகிறது.
இது ஒரு தற்காலிகமான நிலை அல்ல, இது ஒரு தெளிவானத் தேர்வு.


