கைது, சிறைவாசம் மற்றும் பிணை காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (17) முதன்முறையாக பொது நிகழ்வில் பங்கேற்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், நிகழ்வில் நாமல் ராஜபக்ச உடன் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.


