Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்டொனால்ட் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை..!

டொனால்ட் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையில் ட்ரம்ப் கையில் ‘பிட்காயின்’ என்ற ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்திற்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது.

அதன்படி, குறித்த அறிவிப்பு வெளிவந்த வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக டொனால்ட் டிரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை துாண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments