Wednesday, June 11, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கைதுசெய்யப்படுவாரா விராட் கோலி ? பொலிஸில் முறைப்பாடு ?

கைதுசெய்யப்படுவாரா விராட் கோலி ? பொலிஸில் முறைப்பாடு ?

பெங்களூருவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி அரங்கிற்கு அருகே இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுகுறித்து விசாரணை முன்னெடுக்குமாறு பெங்களூரு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்திய ரூபா மதிப்பில் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளதுடன் இவ்வாறு கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments