ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் பௌத்தர்களால் முன்னெடுக்கப்படும் மதச் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக இலங்கை பொலிஸாரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொசன் பெருநாளுக்காக அதிகமான பக்தர்கள் வருகைதரும் என எதிர்பார்க்கப்படும் அனுராதபுரம் புனித நகரத்தை மையமாகக் கொண்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
அதற்காக, அனுராதபுரம் பகுதிக்குள் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 06 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 3,500க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினரும் தேவையான நேரங்களில் உதவிக்கு அழைக்கப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை புனிதஸ்தலம் ,ஸ்ரீ மகா போதி, அட்டமஸ்தானம், தந்திரிமலை ரஜ மகா விகாரை, அவுக்கண, விஜிதபுரம், நாமல் உயன இந்த பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனடிப்படையில், அனுராதபுரம் நகரில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடங்கள்:
ருவன்வெலிசாய வாகன நிறுத்துமிடம்
ருவன்வெலிசாய பிரபு வாகன நிறுத்துமிடம்
மிரிசவெட்டிய வாகன நிறுத்துமிடம்
வட்ட வந்தனா வாகன நிறுத்துமிடம்
இசுருமுனி பாடசாலை வாகன நிறுத்துமிடம்
தூபாராம ஸூசான பூமி அருகிலுள்ள வாகன நிறுத்துமிடம்
சந்தஹிரு சாய வாகன நிறுத்துமிடம்
பழைய மதகுரு கல்வி நிலைய வாகன நிறுத்துமிடம்
அபயகிரிய வாகன நிறுத்துமிடம்
லங்காராம வாகன நிறுத்துமிடம்
சமாதி பௌத்த சிலை வாகன நிறுத்துமிடம்
ஜேதவனாராம வாகன நிறுத்துமிடம்
நெல்லிக்குளம் பாடசாலை வாகன நிறுத்துமிடம்
புராவித்யா சந்தியிலுள்ள வாகன நிறுத்துமிடம்
பழைய சிறைச்சாலை வாகன நிறுத்துமிடம்
குருநாகல் சந்தி வாகன நிறுத்துமிடம
எட்டு ஏக்கர் வாகன நிறுத்துமிடம்
பழைய பொலிஸ் பூமி வாகன நிறுத்துமிடம்
பழைய பொலிஸ் பூமி பிரபு வாகன நிறுத்துமிடம்
சந்தகட பகண வாகன நிறுத்துமிடம்
குட்டம் பொகுண வாகன நிறுத்துமிடம்
மேலும் மிஹியந்தலை புனிதஸ்தலத்திற்காக 7 வாகன நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அம்பகொடுவ வாகன நிறுத்துமிடம்
கந்துபாமுல வாகன நிறுத்துமிடம்
களுதிய பொகுன வாகன நிறுத்துமிடம்
இசுறு உயன வாகன நிறுத்துமிடம்
திஸ்ஸ விளையாட்டு மைதான வாகன நிறுத்துமிடம்
புதிய வாகன நிறுத்துமிடம்
பிரதேச செயலக அலுவலக வாகன நிறுத்துமிடம்
அனுராதபுரம் நகரத்திலுள்ள வெவ்வேறு குளங்கள் மற்றும் நீர்தடாகங்களில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுமார் 150 பொலிஸார் நீச்சல் பாதுகாப்பு பணிக்காக அனுராதபுரம் பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 3,500க்கும் அதிகமான பொலிஸார் அனுராதபுரம் புனித நிலத்தை மையமாகக் கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புனிதஸ்தலத்தில் மது மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், வீதிகளில் அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்பதால், வாகனங்களை நியமிக்கப்பட்ட நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
வாகனங்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் பொலிஸார் பணியாற்ற உள்ளனர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள:
பொலிஸ் ஒழுங்கமைப்பு நிலையம் – 025 – 2222124
வாகன நெரிசல் அல்லது விபத்து சம்பவங்கள் தொடர்பாக – 071 – 8593330 இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.