Friday, June 13, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! – பிரதமர் மோடி

ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் செய்யப்பட்டு பேருந்து பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாலை 5 மணியளவில் கர்நாடக சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், ஆளுநர் தலைமையில் சின்னசாமி திடல் வரை அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ரசிகர்கள் ஆரவரத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

இதனால், காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

இதுபற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments