Saturday, April 26, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்பயங்கரவாத தாக்குதல்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

பயங்கரவாத தாக்குதல்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

இந்தநிலையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அனைத்து கட்சிகளுடன் பேசுகிறார்கள்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments