அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (30) நடைபெற்றது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் நாயகி கயாடு லோஹர் கலந்துகொள்ளவில்லை.
இதற்குப் பதிலாக, துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ’ம் கேம்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
இதனால், கயாடு லோஹர் தமிழ் பட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறாரா என்ற கேள்விகளைச் சமூக வலைதள பயனர்கள் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், செப்டம்பர் 3ஆம் திகதி துல்கர் சல்மானின் ‘ஐ’ம் கேம்’ படமும் வெளியாகவுள்ளது.
மேலும், நானியுடன் ‘பாரடைஸ்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் கயாடு லோஹர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


