Saturday, August 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் 567 மில்லியன் டொலர் அபராதம்!

மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் 567 மில்லியன் டொலர் அபராதம்!

சிறுவர்களுக்கு தமது தளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவர் நேற்று (6) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட மிகப்பெரிய தீர்ப்பு இதுவாகும்.

சமூக வலைதளப் பெருநிறுவனமான மெட்டா, காற்று மாசுபாட்டைப் போன்ற ஒரு பொது பிரச்சினை போன்ற, எதிர்கால தீங்குகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியத்தில் அந்தப் அபராத தொகையினை அது செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி பிரையன் பீட்ஷீட் தெரிவித்தார்.

இந்த வழக்கின் மூலம் மெட்டா ஏற்கனவே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்ட 375 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதத் தொகையுடன் சேர்த்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Instagram, Facebook, WhatsApp மற்றும் Threads ஆகியவற்றுக்குச் சொந்தமான நிறுவனமான மெட்டா உள்ளது.

இவ்வழக்கில் இதற்கு முன்பு வழங்கப்பட்ட 375 மில்லியன் ​அமெரிக்க டொலர் தீர்ப்புக்கு எதிராக மெட்டா நிறுவனம் மேன்முறையீட்டை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments