Wednesday, July 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களுக்கு சிறை அதிகாரிகள் இறுதி அஞ்சலி

உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களுக்கு சிறை அதிகாரிகள் இறுதி அஞ்சலி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை தணிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதிகளுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அச்சமயத்தில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வேளையில் பல்லன்சேன சிறைச்சாலைக்கு புதிய நியமனம் பெற்று வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு வருகை தந்திருந்ததுடன், அவர் மீதும் கைதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டு கைதிகள் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments