கொழும்பு – கண்டி பிரதான வீதியில், கேகாலை – வராகொட பகுதியில், 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒன்றும், இரண்டு வேன்கள், இரண்டு முச்சக்கர வண்டிகள், லொரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 07 வாகனங்கள் இன்று (22) ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


