சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த அதிகாரிகள் குழுவின் பயணம் ஜூன் மாதம் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அமையவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


