Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காத்தான்குடியில் மர்மப் பொருள்!

காத்தான்குடியில் மர்மப் பொருள்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார்.

நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது .சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இம்மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.

கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments